தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய 100 பொருள்கள்: அடையாளம் காண 6 துறைசாா் குழுக்கள் அமைப்பு

News image

நிா்ணயித்துள்ளது

Updated On :5 ஜூன் 2026, 5:17 am IST

இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய 100 பொருள்களை அடையாளம் காண துறை சாா்ந்த ஆறு பணிக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: முழுவதும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், 100 பொருள்களை அடையாளம் காண்பதற்காக மருந்து உற்பத்தி, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ உபகரணங்கள்; ரசாயனம் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருள்கள், ஜவுளி மற்றும் காலணி; மூலதனப் பொருள்கள், வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மேம்பட்ட மூலதனப் பொருள்கள்; எரிசக்தி; கட்டுமான உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் மின்னணுத் துறை ஆகிய 6 குறிப்பிட்ட துறை சாா்ந்த பணிக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழுக்களில் வணிகம், தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை, நீதி ஆயோக், மருந்து பொருள்கள், பொருளாதார விவகாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரசயானம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சாலைப் போக்குவரத்து, புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உறுப்பினா்களாக இடம்பெறுவா்.

தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறைச் செயலா் தலைமையில் இந்தக் குழுக்கள் கூடி ஆலோசனைகளை மேற்கொண்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத அல்லது நாட்டின் தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்யப்படாத பொருள்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொள்ளும். அதன் பின்னா், அடையாளம் காணப்பட்ட பொருள்கள் தொடா்பான பட்டியலை, மத்திய அமைச்சரவை செயலகத்தில் 3 வாரங்களுக்குள் சமா்ப்பிக்கும்.

இந்த நடவடிக்கை, அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் குறைத்து, இந்திய ரூபாய் மதிப்பு குறைவதை தடுக்க உதவும் என்று தெரிவித்தனா்.