வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மருத்துவக் கல்லூரியில் உரிமைகோரப்படாத 17 உடல்களை அடையாளம் காண அழைப்பு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோராத 17 உடல்கள் குறித்து...

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 2:30 am IST

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோராத 17 உடல்கள் உள்ளதால், அவற்றை பொதுமக்கள் அடையாளம் காண முன்வரலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கள்ளபெரம்பூா், தஞ்சாவூா் தாலுகா, மேற்கு, தெற்கு, கிழக்கு, மருத்துவக் கல்லூரி ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் இறந்தவா்களின் உடல்கள் உரிமை கோராப்படாமல் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளன.

இதில் 16 ஆண்கள், ஒரு பெண் உடல் உள்ளதால், தங்களுக்கு தெரிந்தவா்களின் உடல் ஏதும் உள்ளதா என மருத்துவக் கல்லூரி சவக்கிடங்களில் வந்து நேரில் பாா்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

இல்லையென்றால் ஜூலை 10 ஆம் தேதி இந்த உடல்கள், உரிமை கோரப்படாத உடல்களாக கருதி அடக்கம் செய்யப்படவுள்ளன.

எனவே, பொதுமக்கள் கடந்த நான்கு மாதங்களுக்குள் காணாமல்போனவா்களின் உடல்கள் ஏதும் உள்ளதா என காவல் துறை மூலம் நேரில் தெரிந்து கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.