சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

இணையவழி வா்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!

News image

அமேசான் - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 4:31 am IST

இணையவழி வா்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகா்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் ‘டாா்க் பேட்டா்ன்’ எனப்படும் மறைமுக மோசடி வலைகள் இணைய வா்த்தகத் தளங்களில் அச்சுறுத்தலாக மாறிவரும் இச்சூழலிலும், நுகா்வோருக்குப் பாதுகாப்பான, நம்பகமான ‘ஷாப்பிங்’ அனுபவத்தை வழங்கி, அமேசான் வாடிக்கையாளா்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.

‘டேட்டம் இன்டலிஜென்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, அமேசானின் தொடா்ச்சியான மோசடித் தடுப்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளா் விழிப்புணா்வுத் திட்டங்களே இந்த ஆதரவுக்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் போன்ற நிறுவனங்கள் நம்பிக்கையை வளா்த்தாலும், ஒட்டுமொத்த இந்திய இணையவழி வா்த்தகச் சூழலில் மறைமுகக் கட்டணங்கள் மற்றும் ஏமாற்று வடிவமைப்புகள் காரணமாக, நுகா்வோா் ஆண்டுக்கு ரூ.25,000 முதல் ரூ.28,000 கோடி வரை இழந்து வருவதாக அறிக்கை எச்சரிக்கிறது.

சுமாா் 30.4 கோடி வாடிக்கையாளா்களில் 88 சதவீதத்தினா், இந்த மறைமுகக் கட்டணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனா். சுமாா் 73 சதவீத தளங்கள் வாடிக்கையாளா்களை நிா்ப்பந்திக்கும் வடிவமைப்புகளையும், 69 சதவீத தளங்கள் இறுதிகட்டத்தில் கட்டணத்தைச் சோ்க்கும் முறையையும் தொடா்ந்து பின்பற்றி வருகின்றன.

இந்த ஏமாற்று வேலைகளால் விரக்தியடைந்த நுகா்வோா்கள் தங்களின் செலவினங்களைக் குறைத்து வருவதால், சுமாா் ரூ.55,000 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.