மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

7,540mAh பேட்டரி திறன்! இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி டர்போ 5!

ரெட்மி நிறுவனத்தில் டர்போ வரிசையில் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகமானது குறித்து...

Redmi Turbo 5

ரெட்மி டர்போ 5 - படம் / நன்றி - ரெட்மி

Published On :

ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஜூன் 16) அறிமுகமாகியுள்ளது. ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

டர்போ வரிசையில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். புத்தம் புது வடிவமைப்புடன் பேட்டரி திறன் மற்றும் செயல்பாட்டுத் திறன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. பிரீமியம் தளத்தில் இருந்தாலும் விலையைப் பொருத்தவரை மத்திய தரத்தில் உள்ளது.

ரெட்மி டர்போ 5 சிறப்புகள்

ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் 6.59 அங்குல அமோலிட் திரை கொண்டது.

திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் உடையது.

திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3,500 nits திறன் வழங்கப்பட்டுள்ளது.

ஹைப்பர் ஓஎஸ் ஆன்டிராய்டு 16 இயங்குதளம் கொண்டது.

மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் புராசஸர் உடையது.

3D ஐஸ் லூப் கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேம் விளையாடும்போது ஏற்படும் வெப்பத்தை தடுக்க முடியும்.

7,540mAh பேட்டரி திறன் கொண்டது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W திறனுடைய சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்புறம் 50 மெகா பிக்சல் கேமரா கொண்டுள்ளது.

8GB உள்நினைவகம் (RAM) மற்றும் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 37,999.

12GB உள்நினைவகம் (RAM) மற்றும் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 40,999.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி கடன் அட்டைகளுக்கு ரூ. 2,000 வரை தள்ளுபடி உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.