உலகின் முதல் செய்யறிவு (ஏஐ) நகரத்தை உருவாக்கும் முயற்சியில் அபுதாபி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நகரத்துக்கு அயன் சென்டியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
செய்யறிவின் முழு திறனையும் பயன்படுத்தும் வகையில், ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து வசதி, ஸ்மார்ட் குடியிருப்புகள், சாலை விதிகளைக் கண்காணிக்க, சுகாதாரம், எரிசக்தி என பல்வேறு துறைகளில் ஏஐ பயன்பாட்டை முதன்மையாகக் கொண்டு இந்த நகரம் உருவாக்கப்படுகிறது.
இந்த நகரத்தை அபுதாபியைச் சேர்ந்த போல்ட் டெக்னாலஜிஸ் மற்றும் இத்தாலியின் ரியல் எஸ்டேட் டெவலப்பர் மி ஆன் ஆகிய நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றன. இந்த நகரத் திட்டத்தின் கட்டமைப்புக்காக அபுதாபி அரசு சார்பில் 13 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்யறிவின் உலகளாவிய தலைநகரமாக மாற வேண்டும் என்ற நோக்கத்திற்காக அயன் சென்டியாவை உருவாக்கிவரும் அபுதாபி அரசாங்கத்திற்கு உதவியாக ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளன.
அனைத்து வகையான ஏஐ பயன்பாட்டு சேவைகளும் ஒரே குடையின் கீழ் கிடைக்கச் செய்யும் வகையில், இந்த நகரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மையா (MAIA) என்ற செய்யறிவு ஸ்மார்ட்போன் செயலியை அயன் சென்சியா நகரம் பயன்படுத்தவுள்ளது.
இதன்மூலம் இந்நகரத்தில் வசிக்கும் மக்களை பயனர்களாக ஒருங்கிணைக்க முடியும். இந்த செயலி, எரிசக்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறை சேவைகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
செய்யறிவு நகரமாக மட்டுமின்றி அறிவியல் நகரமாகவும் இருக்கும் வகையில் அயன் சென்டியா உருவாக்கப்படுகிறது. அபுதாபியில் இந்த ஏஐ நகரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
Summary
Abu Dhabi set to become the world’s first fully AI-Powered government by 2027
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ. 940 லட்சம் கோடி சம்பாதிப்பது சாத்தியம்தான்: எலான் மஸ்க்

அமெரிக்க அரசு தடை விதித்த ஆந்த்ரோபிக் ஏஐ மாடல்கள்! ஏன்? எதற்காக? என்ன ஆபத்து?

உலகின் முதல் டிரில்லியனரான எலான் மஸ்க்!
உலகின் முதல் டிரில்லியனராகும் எலான் மஸ்க்! ரூ. 94.95 லட்சம் கோடியில் என்னவெல்லாம் செய்யலாம்?
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK




