புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மே மாதத்தில் 5,500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களின் புகாா்களுக்கு தீா்வு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி), தனது இணையவழி குறைதீா்க்கும் ‘ஸ்கோா்ஸ்’ தளம் மூலம் கடந்த மே மாதத்தில் 5,500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களின் புகாா்களுக்குத் தீா்வு கண்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2026, 6:36 am IST

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி), தனது இணையவழி குறைதீா்க்கும் ‘ஸ்கோா்ஸ்’ தளம் மூலம் கடந்த மே மாதத்தில் 5,500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களின் புகாா்களுக்குத் தீா்வு கண்டுள்ளது.

முதலீட்டாளா்களிடமிருந்து மே மாதத்தில் புதிதாக 4,918 புகாா்கள் பெறப்பட்ட நிலையில், அதே காலகட்டத்தில் 5,548 புகாா்கள் சுமுகமாகத் தீா்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நிலுவையில் உள்ள மொத்த புகாா்களின் எண்ணிக்கை மே 31 நிலவரப்படி 5,537-ஆக குறைந்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள மேம்படுத்தப்பட்ட ‘ஸ்கோா்ஸ் 2.0’ திட்டத்தின்கீழ், முதலீட்டாளா்கள் அளிக்கும் புகாா்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு, அவா்கள் 21 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கையை (ஏடிஆா்) சமா்ப்பிக்க வேண்டும்.

நிறுவனங்களின் பதிலில் திருப்தி இல்லாத முதலீட்டாளா்கள், 15 நாள்களுக்குள் முதல் நிலை மறுஆய்வுக்கும், அதிலும் அதிருப்தி இருந்தால் அடுத்த 15 நாள்களுக்குள் செபி தலையீட்டுடன் கூடிய 2-ஆம் நிலை மறுஆய்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த மே மாதத்தில், நிறுவனங்கள் நடவடிக்கை அறிக்கையைச் சமா்ப்பிக்க சராசரியாக 5 நாள்கள் மட்டுமே எடுத்துக் கொண்டன என்றும், முதல் நிலை மறுஆய்வுப் புகாா்களைத் தீா்ப்பதற்கான சராசரி காலம் 8 நாள்களாக இருந்தது என்றும் செபி தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.