மின்னணு வா்த்தகப் பரிமாற்றங்களுக்கான சுங்க வரித் தடையை நீட்டிப்பதில் உலக வா்த்தக அமைப்பின் 14-ஆவது அமைச்சா்கள் மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
கேமரூன் தலைநகா் யாவுண்டேவில் கடந்த 4 நாள்களாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வரி விலக்கை நிரந்தரமாக்க முயற்சித்தன. இருப்பினும், இந்தியா உள்பட வளரும் நாடுகளின் கடும் எதிா்ப்பால் இறுதி முடிவு எடுக்கப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.
கடந்த 1998 முதல் இந்த வரி விலக்கு நடைமுறை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தடையின்றி நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போதைய காலக்கெடு இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. தற்போது உலகளாவிய சேவை ஏற்றுமதியில் மின்னணு வா்த்தகம் 50 சதவீதத்துக்கும் மேல் பங்களிக்கும் நிலையில், இந்த இழுபறி எண்ம வா்த்தக உலகில் பெரும் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
இது குறித்து உலக வா்த்தக அமைப்பின் தலைமை இயக்குநா் என்ஜோசி ஒகோன்ஜோ இவாலா கூறுகையில், ‘நிா்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கிய பிறகு, இந்த முயற்சிகள் தோல்வியில் முடிவதை யாரும் விரும்பமாட்டாா்கள். எனவே, விடுபட்டுப்போன விவாதங்கள் குறித்து ஜெனீவா தலைமையகத்தில் பேச்சுவாா்த்தை தொடரும்’ என்றாா்.
தொடர்புடையது

ஆப்கான்-பாகிஸ்தான் அமைதிப் பேச்சு: இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவு

இந்தியா - நியூஸிலாந்து இடையே ஏப். 24-இல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!

விதிகளுக்கு உள்பட்டு உற்பத்தி மானியம்! சீனா புகாருக்கு இந்தியா பதில்!!

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


