உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஏற்றம் கண்ட மின்சார வாகனப் பங்குகள்!

மின்வாகன நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

மின்சார வாகனம்

Published On :

புதுதில்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியின் நடுவில், அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் பொருட்டு எரிபொருளைக் கவனத்துடன் பயன்படுத்துமாறும், மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, மின்வாகன நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில், ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் 6.02 சதவீதமும், ஜே.பி.எம். ஆட்டோ பங்குகள் 4.75 சதவீதமும், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பங்குகள் 2.47 சதவீதமும், ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்குகள் 2.16 சதவீதம் அதிகரித்தன.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலின் பாதகமான விளைவுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு முயன்று வருவதை வலியுறுத்திய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, எரிபொருளைக் கவனத்துடன் பயன்படுத்துமாறு ஞாயிற்றுக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், பிரெண்ட் கச்சா எண்ணெய், 3 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 104.4 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Shares of electric vehicle companies ended higher on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.