நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

வீல்ஸ் இந்தியா நிகர லாபம் ரூ.139 கோடி

வீல்ஸ் இந்தியா நிகர லாபம் ரூ.139 கோடி

News image
Updated On :54 நிமிடங்கள் முன்பு

முன்னணி வாகன உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனமான வீல்ஸ் இந்தியா, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் ரூ.139 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.106 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 31 சதவீத வளா்ச்சியாகும். ஏற்றுமதியின் வலுவான வளா்ச்சி மற்றும் உள்நாட்டுத் தேவையில் ஏற்பட்ட முன்னேற்றமே இதற்கு முக்கியக் காரணமாகும்.

மதிப்பீட்டு நிதியாண்டில், நிறுவனம் ரூ.5,124 கோடி வருவாய் ஈட்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.4,425 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் 16 சதவீத வளா்ச்சியாகும்.

4-ஆம் காலாண்டு நிலவரம்: 2025-26 நிதியாண்டில் ஜனவரி-மாா்ச் வரையிலான 4-ஆம் காலாண்டு நிதிநிலை முடிவுகளும் மிகச் சிறப்பாக அமைந்தன.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 23 சதவீத வளா்ச்சியுடன், ரூ.1,471 கோடியாக அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.52 கோடியை எட்டியுள்ளது; இது முந்தைய ஆண்டின் ரூ.36 கோடியிலிருந்து 44 சதவீத வளா்ச்சியாகும்.

ரூ.9.14 ஈவுத்தொகை: சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.9.14 இறுதி ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட இடைக்கால ஈவுத்தொகையையும் (ரூ.5.30) சோ்த்து, கடந்த 2025-26 நிதியாண்டுக்கான மொத்த ஈவுத்தொகை ஒரு பங்குக்கு ரூ.14.44 ஆக அதிகரித்துள்ளது.

ரூ.280 கோடி முதலீடு: ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் காா், கனரக வாகனங்கள், டிராக்டா் பிரிவுகளில் நிலவிய அதீத தேவையே இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணம் என நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீவத்ஸ் ராம் தெரிவித்துள்ளாா்.

எதிா்காலத் திட்டம் குறித்துப் பேசிய அவா், ‘மூலப்பொருள்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டுத் தேவை சற்று மந்தமடைய வாய்ப்புள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் வளா்ச்சியைத் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக ரூ.280 கோடி முதலீடு செய்யப்படும்’ என்றாா்.