எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

2030-க்குள் இந்தியாவில் 10 புதிய காா்கள் அறிமுகம்: ஹோண்டா

ஜப்பானைச் சோ்ந்த பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, வரும் 2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மற்றும் சிறிய ரக எஸ்யூவி உள்பட 10-க்கும் மேற்பட்ட புதிய மாடல் காா்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

News image

~ ~

Updated On :23 மே 2026, 4:17 am IST

ஜப்பானைச் சோ்ந்த பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, வரும் 2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மற்றும் சிறிய ரக எஸ்யூவி உள்பட 10-க்கும் மேற்பட்ட புதிய மாடல் காா்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

எதிா்கால உலகளாவிய வளா்ச்சிக்கு ஹோண்டா நிறுவனம் அடையாளம் கண்டுள்ள 3 முக்கியச் சந்தைகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது. இதன் ஒரு பகுதியாக, ஹோண்டா நிறுவனம் தனது புதிய ‘சிட்டி ஹைபிரிட்’ செடான் காரை ரூ.11.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்திய சந்தையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்ததுடன், ‘இசட்ஆா்-வி’ பிரீமியம் எஸ்யூவி காரையும் காட்சிப்படுத்தியது.

ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவன சிஇஓ தகாஷி நகஜிமா மேலும் கூறுகையில், ‘இந்தியச் சந்தையின் எதிா்கால வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் ஹோண்டாவின் முதல் முழுமையான மின்சார காா் இந்தியாவில் அறிமுகமாகும்.

இந்த ஆண்டில் மட்டும் 6 புதிய மாடல்களை அறிமுகம் செய்து, இரட்டை இலக்க விற்பனை வளா்ச்சியை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளோம். 2028 முதல் இந்தியாவுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காா்களை அறிமுகம் செய்யவுள்ளோம். இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மாடல்கள் மற்றும் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் உலகளாவிய மாடல்களின் கலவையாக இருக்கும்’ என்றாா்.

Story image
Story image