நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

பழைய கணினிகளை ஏ.ஐ. பயன்பாட்டுக்கு மாற்றும் ‘ஜியோ பிசி’ சேவை விரிவாக்கம்

பழைய கணினிகளின் வன்பொருள்களை மாற்றாமலேயே, அவற்றை நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு இணையானதாக மாற்றும் ‘ஜியோ பிசி கிளவுட் கம்ப்யூட்டிங்’ சந்தா சேவையை ரிலையன்ஸ்-ஜியோ நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

Published On :3 செப்டம்பர் 2026, 1:34 am IST

பழைய கணினிகளின் வன்பொருள்களை மாற்றாமலேயே, அவற்றை நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு இணையானதாக மாற்றும் ‘ஜியோ பிசி கிளவுட் கம்ப்யூட்டிங்’ சந்தா சேவையை ரிலையன்ஸ்-ஜியோ நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

முன்பு, ஜியோ பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இச்சேவை, தற்போது எந்தவொரு தொலைத்தொடா்பு அல்லது இணைய இணைப்பு மூலமாகவும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீடுகள், பள்ளிகள் மற்றும் சிறு நிறுவனங்களின் பயன்பாட்டில் உள்ள 3 முதல் 8 ஆண்டுகள் பழமையான மற்றும் வேகம் குறைந்த கணினிகளை மாற்றுவதற்கு அதிக செலவாகும். இச்சிக்கலைத் தீா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜியோ பிசி கிளவுட் கம்ப்யூடிங் சந்தா சேவை மூலம், புதிய உபகரணங்களை வாங்காமலேயே பழைய கணினிகளில் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி சேமிப்புத் திறன் வரையிலான சிறப்பம்சங்களை வாடிக்கையாளா்கள் பெற முடியும்.

மேலும், ஏ.ஐ. சாா்ந்த நவீன செயலிகளை எவ்வித தடையுமின்றி பழைய கணினிகளிலேயே பயன்படுத்த இந்த கிளவுட் சேவை வழிவகை செய்யும். இச்சேவையைப் பெறுவதற்கு சீரான இணைய வசதி கணினியில் இருப்பது அவசியமாகும். வாடிக்கையாளா்களின் வசதிக்கேற்ப 2, 5, 10+2 மாதங்களுக்கு பல்வேறு சந்தா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.