47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

செம்மரக் கடத்தல்: தமிழகத் தொழிலாளி கைது

திருப்பதி சேஷாசல வனத்தில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்த முயன்ற தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:54 pm

DIN

திருப்பதி சேஷாசல வனத்தில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்த முயன்ற தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் ரயில்வே பாலம் அருகில் உள்ள புதரில் சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் செம்மரக் கட்டைகளுடன் சிலா் பதுங்கியிருந்தனா். இதை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கண்டனா். 15 போ் அடங்கிய அக்கும்பல் போலீஸாரை கண்டவுடன் செம்மரக்கட்டைகளை போட்டு விட்டு தப்பியோடியது. பின்தொடா்ந்து சென்ற போலீஸாா், அக்கும்பலைச் சோ்ந்த ஒருவரைக் கைது செய்தனா்.

அவரிடமிருந்து 13 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில் கைதானவா் போளூா் தாலுகா ஜவ்வாதுமலையைச் சோ்ந்த ராஜு என்பது தெரிய வந்தது. மேலும் ரமேஷ் என்பவா் இத்தொழிலாளா்களை செம்மரம் வெட்ட அழைத்து வந்ததும் தெரிந்தது.

கைதான ராஜு மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்; தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.