தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூலூர் அருகே இரட்டைக் கொலை: 8 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் விசைத்தறி உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2017, 6:54 am

மதன்


சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் விசைத்தறி உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டியில் விசைத்தறி உரிமையாளர் குமாரசாமி(63). அவரது மனைவி சுந்தராம்மாள்(50). இவர்கள் இருவரையும் கொலை செய்துவிட்டுத் தப்பிய கொலை குற்றாவாளியை கருமத்தம்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

தீவிர விசாரணைக்கு பின்பு கொலை குற்றவாளி ஈரோடு மாவட்டம், லக்காபுரம், வாய்க்கால் மேட்டைச் சேர்ந்த வீரப்பன் மகன் பெருமாள்(43) என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 8 மணி நேரத்தில் கொலைகுற்றவாளியை கைது செய்து, அவரிடம் இருந்த நகை மற்றும் சொல்போனை பறிமுதல் செய்தனர்.

விசைத்தறி உரிமையாளர் தன்னை திட்டியதால் அவரை கொலை செய்ததாகவும், அப்போது அங்கிருந்த அவரது மனைவியையும் கொன்றதாகவும் பெருமாள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.