கவிதை எழுதியோ
கண்ணீர் வடித்தோ..
எம் சோகத்தை
ஆற்றிக் கொள்ளமுடியாது..
உயிரைப் பிரிந்தவனுக்கு
உணர்வுகள் எப்படி இருக்கமுடியும்..
தமிழகத்தின் தங்கத் தாரகையே
சந்தனப்பேழைக்குள் உறங்கும் - உன்
சரித்திரத்தை - நாளைய
சந்ததிகள் வாசிக்கும்..
இன்று எங்களை தொற்றிக்
கொண்ட சோகத்தை
எங்கு தொலைப்பது..
காற்று கூட நிரப்ப முடியாத
வெற்றிடமானது நீ வாழ்ந்த
தமிழகம்..!
உன்னைப் போலவே இப்போது
சுவாசம் தேடி அலைகிறது.
மானுடச் சந்தையில்
விலைமதிக்க முடியாத
உயிர் வாங்கிப் போன
எமனை ஒன்று கேட்கிறேன்..
ஏனடா..
ஒற்றைக் கோப்பையில்
ஒட்டுமொத்தமாய்
ஒரு தேசத்தின்
உயிர் குடித்தாய்
-திருமலை சோமு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










