டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பத்திரிகை தடை என்னை அடக்கிவிடாது!

ஹரிஜன் பத்திரிகை மீது தடை விதிக்கப்பட்டால் என்ன செய்வேன் என்று கேட்கிறீர்கள்.

News image
Updated On :26 டிசம்பர் 2018, 1:07 am IST

ஹரிஜன் பத்திரிகை மீது தடை விதிக்கப்பட்டால் என்ன செய்வேன் என்று கேட்கிறீர்கள். இப்போது எனக்குத் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். கேட்டை முன்கூட்டி எதிர்பார்க்கும் வழக்கம் எனக்கு கிடையாது. மனதை அவ்வாறு பண்படுத்திக்கொண்டேன். தீமை என்னை நெருங்கிவிட்டால் அதற்கு நிவாரணம் என்ன என்பதை நன்றாக உணர்கிறேன். தெய்வத்துக்குப் பயந்து நடப்பவன் செயலாற்றும் வழி அதுவே.
தெய்வ பயம் மற்றெல்லா பயங்களையும் போக்குகிறது. ஆனால், உறுதியாக ஒன்று கூறுகிறேன். ஹரிஜன் பத்திரிகையைத் தடுத்துவிடுவதால், என்னை அடக்கிவிடுவதாக ஒருபோதும் ஆகிவிடாது.
மேற்கண்டவாறு மகாத்மா காந்தி ஹரிஜன் பத்திரிகையில் எழுதுகிறார். ஒருவர் கடிதம் மூலம் எழுப்பிய கேள்விக்கு மகாத்மா காந்தி பின்வருமாறு பதிலளிக்கிறார்:
தாராள புத்தியுடன் நடந்துகொள்ள எந்த சர்க்காருக்கும் முடியாது. தனி மனிதன், தனக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய ஒரு செயலை மேற்கொள்ளும் போதுதான் தாராளம் காட்டுகிறான். ஆனால் தமக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய எந்த காரியத்தையும் நடத்த சர்க்காருக்கு முடியாது. நீதி என்பது கடன் போன்றது. கொடுத்து தீர்க்கக் கூடியது. ஆகையால் சர்க்கார், ஹரிஜன் பத்திரிகையை வழக்கப்பிரகாரம் வெளிவருவதற்கு அனுமதிப்பதென்றால் அவர்கள் கருத்துக்கு பொருந்தி இருக்கிறது என்பதே பொருள். அவ்வாறு செய்வது தங்களுக்கு நல்லதல்ல என்று சர்க்கார் கருதுமாகில், தடை விதிக்க தயங்காது. தடையை மீறி பிரசுரிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது என்று இதை மீண்டும் ஆரம்பிக்கையில் நான் கூறினேன். சர்க்கார் விரும்புமானால், நான் மறுபடியும் பத்திரிகை பிரசுரத்தை நிறுத்தி விடுவேன். அவர்கள் அவ்வாறு செய்தால் பொதுமக்களுக்கே நஷ்டம்.

தினமணி (17-05-1942)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.