/

சிவப்பரிசி இடியாப்பம்

மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். இடியாப்ப உழக்கில் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 5:44 pm IST


தேவையான பொருட்கள்

சிவப்பு அரிசிமாவு- 1 கிண்ணம்
கொதி நீர் - தேவையான அளவு
உப்பு - சிறிது
வெல்லத்தூள்- தேவையான அளவு.
தேங்காய் துருவல்- அரை கிண்ணம்.

செய்முறை

மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். இடியாப்ப உழக்கில் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சிறிது ஆற வைத்து உதிர்க்கவும். அதில் வெல்லத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கரண்டிக் காம்பால் கிளறவும்.

சத்தானது. அதனால் பாதி அளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். அரிசி மாவு இடியாப்பத்தைவிட ருசியாக இருக்கும்.

கொதி நீர் ஊற்றி ஆறுவதற்கு முன்பு பிழிந்தால் எளிதாக பிழியலாம்.

மரகத மீனாட்சி

மரகத மீனாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.