ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல் பட அங்கீகாரத்துல கொஞ்சம் கர்வப்பட்டுத்தான் போனேன்: சுஜாதா

டிசம்பர் 10 சுஜாதாவின் பிறந்த நாளன்று காலை ஏழு மணிக்கு அவரது வீட்டுக்கு சென்றேன் .

News image
Updated On :29 ஜனவரி 2017, 7:22 am

கவியோகி வேதம்

டிசம்பர் 10 சுஜாதாவின் பிறந்த நாளன்று காலை ஏழு மணிக்கு அவரது வீட்டுக்கு சென்றேன் . சுஜாதா திருவேற்கடு கருமாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தார். கீழே இறங்கி வந்து எங்களை வரவேற்ற அவரது கணவர் ஜெயகர், "இன்னைக்கு பூரா அவளோட இருக்கப்  போறீங்களா? ஓகே, கேரி ஆன் என்று சொல்லி விட்டு 'இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்த தன் பால்ய கால நண்பர்களைப் பற்றி விசாரித்தார்.

அப்பொழுது வீடு திரும்பிய சுஜாதா உடனடியாக சமையல் செய்யத் தொடங்கினார். இடையில் வெளியில் வந்து, இன்னிக்கு பூராவும் 'நாயக்கர் மகள்'  படப்பிடிப்பு. என்னதான் ஷூட் அது இதுன்னு இருந்தாலும் அவரையும், என் பையனையும் தயார் பண்ணிட்டுதான் நான் புறப்படுவேன். அத யாருக்கும் விட்டுக் கொடுக்கறதில்ல' என்றார்.

மேக்கப் முடிந்து சுஜாதா புறப்படுகிற  வரை இருந்து வழியனுப்பி வைத்தார் அவரது கணவர் ஜெயகர் . காரில் போய்க் கொண்டிருக்கும் போது சுஜாதா சொன்னார். 

சிலோன்ல சின்ன வயசுல நான் கழிச்ச காலங்கள் ரொம்ப பசுமையா பல நேரங்கள்ல எனக்கு நினைவுக்கு வரும். நடிகையாவேன்னு என்னைக்குமே நான் நினைச்சதில்லை. அதுல எனக்கு விருப்பமும் இருந்ததில்லை. சாவித்திரி, பதமினி மாதிரி ஒரு பெரிய நட்சத்திரமா பிரகாசிக்கணும்னு என் வீட்ல ரொம்ப ஆசைப்பட்டாங்க.வீட்ல உள்ளவங்க ஆசையும் விருப்பமும்,மெதுவா என்னையும் தொத்திக்கிச்சு. பேமிலி பிரண்ட் ஒருத்தர்தான் என்னை முதல்ல மலையாளத்துலா அறிமுகம் செஞ்சு வைச்சார். கிட்டத்தட்ட ஒரு முப்பது மலையாளப் படங்களில் நடிச்சு முடிச்சிருந்த  சமயத்துலதான், பாலச்சந்தர்  மூலமா 'அவள் ஒரு தொடர்கதையில தமிழ்ல  அறிமுகமானேன்.

தமிழ்ல முதல் படம் பிரமாதமான வெற்றி. படத்துல கவிதா மாதிரி இவளும் கஷ்டப்பட்டிருப்பாளோனு நினைச்சு நிறைய பேரு  எனக்கு லெட்டர்ஸ்  எழுதினாங்க.தமிழ் ரசிகர்கள் என்னை அங்கீகரித்த விதத்துல கொஞ்சம் கர்வப்பட்டுத்தான் போனேன்.

கற்பகம் ஸ்டூடியோவுக்குள்  கார் நுழைந்தது. ஷாட் இடைவெளியில் சுஜாதா மீண்டும் பேசத்  தொடங்கினார்.

"ஒரே சீரா இண்டஸ்ட்ரில என்னோட வளர்ச்சி அதிகமாயிட்டே வந்தது.இதுக்கெல்லாம் பின்னால ஆழமான குடும்ப பின்னணி உண்டு. குடும்பத்துல ஏற்படுற எந்த  சலசலப்பும், ஒரு நடிகையோட  நடிப்புணர்ச்சியை பாதிக்கவே செய்யுது. ஒருத்தரைக்  காதலிப்பதிலும் சரி;இல்ல ஒருத்தரைக் கணவரா தேர்தெடுக்கறதிலயும் சரி, ஒரு பொண்ணுக்கு முழு சுதந்தரம் வேணும். அதுவும்  பலரோடு பேசிப்பழகுற, நல்லது கெட்டது  தெரிஞ்ச ஒரு நடிகைக்கு, தான் நினைக்கிறவர மணக்க பரிபூரண சுதந்திரம் அவசியம் தேவை.  

வீடு திரும்பும்  வழியில் காரில் சுஜாதா மீண்டும் தொடர்ந்தார். "இருபத்தொரு வயசிலிருந்து இருத்தைந்து வயசு வரைக்கும் படாத கஷ்டமெல்லாம் பட்டுட்டேன். அது தொடர்ந்து இருந்ததுன்னா எப்படியோ ஆகியிருப்பேன். கலயாணம்கிற சந்தோஷம் வந்து என்னை திசை திருப்பி விட்ருக்கலைன்னா 'பர்ஸ்ட்' ஆகியிருப்பேன்.

எனக்கு நடிகையா பேசத்  தெரியாது. மனசு உணர்றத வாய்  சொல்லிடுது.அதிகப்படியா ஏதாவது சொல்லிருந்தேன்னா நீங்க எழுதிட வேண்டாம். எத்தனையோ கஷ்டங்கள் நான் பட்டிருந்தாலும், என்னால யாரும்     கஷ்டப்பட வேண்டாம்.

சந்திப்பு: உத்தமன்

படங்கள்: சங்கர் கணேஷ்

(சினிமா எக்ஸ் பிரஸ் 01.01.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.