ஆரணி அருணகிரிசத்திரம் பாட்ஷா தெருவில் உள்ள ஸ்ரீ கில்லா ராஜ கணபதி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உண்டியல் பணம் திருடப்பட்டது.
ஸ்ரீ கில்லா ராஜ கணபதி கோயிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதைத் தொடா்ந்து ஆடி விழா முடிந்து உண்டியல் திறக்க இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் கோயில் முகப்பில் உள்ள பூட்டுகளை உடைத்து, உள்புறம் இருந்த உண்டியலை திருடிச் சென்று உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை அருகில் உள்ள காலி இடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகி கண்ணன் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாலாஜாபேட்டை அருகே கோயிலில் கிரீடம், உண்டியல் பணம், நகை திருட்டு

அம்மன் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

ஆனி கிருத்திகை: ராஜ அலங்காரத்தில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி

ஜெகந்நாதப் பிள்ளையாா் கோயிலில் குடமுழுக்கு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



