‘அடியேனை அடிமை கொண்டு ஆள வரவேண்டும்’ என்று கோரும் இந்தப் பாடல் பழநித் திருத்தலத்துக்கானது. பிறவியே வேண்டாம்; இருந்தாலும் பிறவி எடுக்கத்தான் வேண்டுமென்றால் ‘இன்னின்ன குறைகள் இல்லாமல் பிறந்து, அந்தப் பிறவியிலேனும் அடியேனுக்கு நற்குடிப் பிறப்பும் அறிவும் நீதி ஒழுக்கமும் அமைந்து என்னை அடிமை கொள்வதற்காக வந்தருள வேண்டும்’ என்று கேட்கிறார்.
அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகள்; தொங்கல் சீரை ஒழித்து மற்ற அத்தனைச் சீர்களிலும் குற்றெழுத்துகளால் அமைந்த பாடல்.
தனன தனன தனன தனன
தனன தனன தனதான
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் - விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு - மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் - வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் - வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள - மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை - விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் - மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

