மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 462

இப்பாடல் வடகூர் என்ற தலத்துக்கானது.

Updated On :25 ஜனவரி 2017, 6:30 pm

இப்பாடல் வடகூர் என்ற தலத்துக்கானது.  இத்தலம் புதுச்சேரிக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிருக்கிறது என்பது உரையாசிரியர் குகஸ்ரீ தணிகைமணியவர்களுடைய குறிப்பால் தெரிகிறது.  முருகனுடைய திருவடிகளைத் தொழும் பேறு ஒன்றையே வரமாகக் கேட்கும் பாடல் இது.

அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் எல்லா எழுத்துகளும் குறில்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒவ்வொரு மூன்றாவது எழுத்தும் நெடில்.

தனதன தனனா தனதன தனனா
      தனதன தனனா                     தனதான

அரியய னறியா தவரெரி புரமூ
         ணதுபுக நகையே                 வியநாதர்
      அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
         றழலையு மழுநேர்               பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
         கமும்விழ விழியே               வியநாதர்
       மனமகிழ் குமரா எனவுள திருதாள்
         மலரடி தொழுமா                றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
         அவனியை வலமாய்             வருவோனே
      அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
         அயில்தனை விசையாய்          விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
         மருவியொர் குறமா              தணைவேடா
      மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
         வருதவ முநிவோர்               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.