அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

04.11.1929: இன்று இந்திய பெண் கணிதமேதை சகுந்தலா தேவியின் பிறந்த தினம்

சகுந்தலா தேவி ஒரு இந்திய பெண் கணிதமேதை ஆவார்.

News image
Updated On :4 நவம்பர் 2016, 8:50 am

DIN

சகுந்தலா தேவி ஒரு இந்திய பெண் கணிதமேதை ஆவார் . சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தனது அபார திறமையினால் கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில், கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்கும் வல்லமை படைத்தவராக விளங்கினார் . தன்னுடைய வியத்தகு கணிதத் திறமையின் மூலம் “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார்.

சகுந்தலா தேவி 1929 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார். சகுந்தலா தேவி தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டுகட்டு விளையாட்டில் பல வித்தைகள் செய்து தன் கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றலில்  தன்னுடைய அசாத்திய திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.

அதன் பிறகு ஜூன் 18, 1980 அன்று லண்டனிலுள்ள 'இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க எண்களை  (7,868, 369,774,870 மற்றும் 2,465,099,745,779  = 18.947.668.177.995.426.462.773.730)  எண்களை பெருக்கி, அதற்கான விடையை வெறும் 28 வினாடிகளில் கூறி உலகை திரும்பிப்  பார்க்கக் வைத்தார்.  இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.

இப்படி பல சாதனைகளை  புரிந்துள்ள சகுந்தலா தேவி சிறுநீரகக் கோளாறு மற்றும் சுவாசப் பிரச்சனைகளின் காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 21.04.2013 அன்று தனது 83 வது வயதில் மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.