படித்து கிழித்தால் பட்டதாரி !
தெருவுக்குள் ஆயிரம் பேர்கள்
அது மாதிரி !
கடைசியில் தந்த பட்டதாரி காகிதம்
கசங்கி போன சோக கீதம்,
பட்டதாரி என்றாலே பட்டினி போடும் சமூகம்,
இறுதியாக இயந்திர படிப்பை
மூட்டை கட்டி வைத்து
இரண்டு வண்டி மாடுகளை கட்டி
விவசாயத்தில் தஞ்சம் அடைந்தேன்.
படித்தவன் என்றால் மாடு
பால் கறக்குமா !
நிலம் தான் பயிறு செய்யுமா !
வாழ வழியில்லா எனக்கு
கடைசியில் வீடு கொடுத்த பட்டம்
உதவாக்கரை....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.