வழி தவறிய பயணங்கள்: லூர்து எஸ் ராஜ்

Updated on
1 min read

அகரம் எழுதச்சொல்லி அந்த நாளில் அம்மா
         அருமையாய் கைபிடித்து முயலும்போது
உகரம் ஊகாரம் என்றழுது ஓடிமறைந்தேன்
         உருப்படாமல் போனநானும் கைநாட்டு ஆனேன்.

நடிகரின் சினிமாவில் மோகமும் தாகமும் கொண்டு   
         நாள்தோறும் படம்பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.
நடிப்பதே வாழ்வென்று நம்பிநான் நகரம் வந்து
        நாலாந்தர மனிதனாகி வாழ்வின் ஓரம் கண்டேன்.

கட்டிய மனைவியின் அடிமையானேன் ; பெற்றோரைக்
         காணநேர்ந்தால் வெறுத்தொ துக்கினேன் ; மனைவியின்
திட்டுக்கு  அஞ்சி பாசமிகு  மாதாபிதாவை இன்று
         நட்டாற்றில் விட்டு நாணமின்றி பொய்யாய்  வாழ்கின்றேன்.

கைகாட்டி மரமென வழியின் நின்றபெரியோர் சொன்ன
         கருத்தையும் ஏற்காமல் காரிருளில்  சென்றேன் ; இன்றோ
வழிதவறிய பயணமாய் ஆகிப்போன வாழ்வெனது ;
         விழிபிதுங்கி நிற்கின்றேன்; வீணாகிப் போன நானும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com