ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வழி தவறிய பயணங்கள்: லூர்து எஸ் ராஜ்

Updated On :14 நவம்பர் 2016, 10:43 am

அகரம் எழுதச்சொல்லி அந்த நாளில் அம்மா
         அருமையாய் கைபிடித்து முயலும்போது
உகரம் ஊகாரம் என்றழுது ஓடிமறைந்தேன்
         உருப்படாமல் போனநானும் கைநாட்டு ஆனேன்.

நடிகரின் சினிமாவில் மோகமும் தாகமும் கொண்டு   
         நாள்தோறும் படம்பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.
நடிப்பதே வாழ்வென்று நம்பிநான் நகரம் வந்து
        நாலாந்தர மனிதனாகி வாழ்வின் ஓரம் கண்டேன்.

கட்டிய மனைவியின் அடிமையானேன் ; பெற்றோரைக்
         காணநேர்ந்தால் வெறுத்தொ துக்கினேன் ; மனைவியின்
திட்டுக்கு  அஞ்சி பாசமிகு  மாதாபிதாவை இன்று
         நட்டாற்றில் விட்டு நாணமின்றி பொய்யாய்  வாழ்கின்றேன்.

கைகாட்டி மரமென வழியின் நின்றபெரியோர் சொன்ன
         கருத்தையும் ஏற்காமல் காரிருளில்  சென்றேன் ; இன்றோ
வழிதவறிய பயணமாய் ஆகிப்போன வாழ்வெனது ;
         விழிபிதுங்கி நிற்கின்றேன்; வீணாகிப் போன நானும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.