என்ன தைரியம் இது
என் வீட்டு ஜன்னலுக்குள்
ஒளி பாய்ச்சி
என் தனிமையை
எட்டிப் பார்ப்பது
யாரது என
ஏறெடுத்து பார்த்தபோது
என் கண்ணில் பட்டதோ
ஒளிர் நிலா
என்ன ஓர் அழகு
என மயங்கிய எனக்கு
ஒரு ரம்மிய உலகை
கண்ணில் காட்டி
இருளைக் கண்டு
இடிந்து போகாதே
விரிந்து கிடக்கும்
உலகை ரசிக்க
வெளியே வா என
கட்டளையிட்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.