வரண்ட நிலம்
வயல்வெளி ஆகி
தானியம் ஆகும்
இரவு பகலாக
இறைக்கும்
ஏற்றத்தால்...
திரும்பும்
திசையெல்லாம்
தென்னை, வாழைமர
தோப்புகள்
ஊருக்கே தாகம்
தணித்து வற்றாது நிறம்மியிருக்கும்
என்றும்
ஆழ்கிணற்றில்
ஊற்றுநீர் ...
ஏற்றம் இறைப்பவருக்கு
வானொலி பாடும்
குருவிகள்...
கிணற்று
துளைகளிலே
அதன் கூடு ...
என செழிப்பான
சொர்கத்தை காட்டும்
ஊரை யெல்லாம்
இனி
காண இயலுமா ???
ஊர்
குப்பைகளால்
தூர்ந்துபோனது
பட்டறை கிணறெல்லாம்...
வீட்டு
கொல்லைகளில்
மிஞ்சிய
கிணறுகளெல்லாம்
மலம் கழிக்கும்
கழிவறை (செப்டிக் டேங்க்)
ஆகிபோனதுதான்
காலக்கொடுமை....
இதை
காணும் உள்ளமோ !
கதறி அழுது புலம்புகிறது...
நெல்லுக் இறைக்க
நீரின்றி
ஏமாந்து
ஏங்கி நிற்கிறது ஏற்றம் ...
வாடி வதங்கி
தொங்குகிறது கயிற்றில் வாளி..
வான்மழை பொழியாமல்
காய்ந்து போன பூமியில்
வேர் இன்றி வாடிடும்
நிலையானது
மனித வாழ்க்கை....
தினம் தினம் திருடப்படும்
ஆற்று மணல்களாலும்
வனத்து மரங்களாலும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

