கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வஞ்சம் செய்வாரோடு: கவிஞர் ராம்க்ருஷ்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:35 pm

கவிதைமணி

நெஞ்சம் இனிக்கப் பேசி இழைவாரோடுபஞ்சம் இல்லா அன்பு காட்டிப் பாராட்டிடதஞ்சம் அடைந்தேன் உனை என்பவர்வஞ்சம் செய்வாரென நினைக்கக்கூடுமோகூட இருந்தே குணங்கள் அறிந்து பழகியவர்வேடமிட்டு பசுத்தோல் போர்த்திய புலியாய்சூடமேற்றி வாக்குறுதிகள் தருவார் எப்போதும்மூடராய் பின்னில் குழிகள் தோண்டிடுவாரேதீயவரைக் கண்டதும் விலகி நடந்திடக்கூடும்மாயவராய் மறைந்திருந்து தீச்செயல் புரியதூயவரென நினைத்துப் பழகி ஏமாற்றத்தில்சாய நின்ற தூண் சரிந்து விழுந்ததுபோலாகுமேவாய்மை என்பது வாயோடு நின்று மறைந்திடதாய்மை அன்பு காட்டியும் நன்றியில்லாமலேவேய்ந்த பொய்மையைப் பின்னால் நிறுத்தியேதோய்ந்த வஞ்சம் செய்வாரோடு வாழ்தல் தகுமோநெஞ்சு பொறுக்குதில்லையே இவரை நினைந்துபஞ்சுபோல பறந்து எங்கும் ஒட்டி உறவாடுவார்அஞ்சி விலகிச் செல்வதே நல்லவர்க்கழகாகும்வஞ்சம் செய்வாரோடு உறவு கொள்ளாதே நீயும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.