திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிச்சத்தை மீட்போம்: -ஆ. செந்தில் குமார்

Updated On :18 ஜூன் 2018, 10:39 am
சுந்தரத் தாய்மொழியில் கற்பதற்கு மனமுண்டா…?சுரண்டிப்பிழைக்காது அரசியல் செய்வோர் எவருமுண்டா…?சுகம்பார்க்க காசுவாங்கா மருத்துவமனை ஏதுமுண்டா…?சுயவிளம்பரம் தேடாத மனிதரென்று யாருமுண்டா…?சுங்கவரிச் சாவடிகள் இல்லாத சாலையுண்டா…?சுற்றுப்புறத் தூய்மை சற்றேனும் இங்குண்டா…?சுற்றத்தைப் பேணுகின்ற மனப்பான்மை சிறிதுமுண்டா…?சுதந்திரம் கிடைத்தபின்னும் பேச்சுரிமை என்பதுண்டா…?வன்முறைகள் இல்லாத நாடென்பது ஒன்றுண்டா…?வகைப்பாடு இல்லாத மனிதகுலம் இங்குண்டா…?வசதியில்லா மாணவர்க்கு கல்விகற்கும் வாய்ப்புண்டா…?விளைநிலங்கள் மனையாகா நிலையேதும் வருவதுண்டா…?முதியோர் இல்லங்கள் முளைக்காத நிலையுண்டா…?மதுவிற்கு அடிமையாகா தலைமுறையும் இங்குண்டா…?மண்வளங்கள் காப்பதற்குத் திட்டங்கள் ஏதுமுண்டா…?மனதிற்கு இதமான சூழ்நிலைகள் மெத்தவுண்டா…?நலத்திட்டம் எல்லாமே உரியவரை அடைவதுண்டா…?நெளிவுசுளிவு தெரியாதோர் வாழ்வதற்கு வாய்ப்புண்டா…? - நமைச்சூழ்ந்த நல்லனவெல்லாமே இவற்றுள் தப்பிப்பிழைத்த மிச்சங்கள்…நல்வாழ்வு வாழ்ந்திடவே இம்மிச்சங்களை மீடடெடுப்போம்…!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.