ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 3

புலியின் தோலை உரித்தவனாகிய

Updated On :8 ஏப்ரல் 2017, 10:29 am

பொய் தொழாது புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா
வைது எழாது எழுவார் எள்க நீர்
கை தொழா எழுமின் கரக் கோயிலே
 

விளக்கம்

பொய் = நிலையில்லாத உலகப் பொருட்கள். சிவபெருமானைத் தொழும் அடியார்களை மற்றவர் ஏளனம் செய்த நிலை அப்பர் காலத்திலும் இருந்ததை நாம் இந்த பாடல் மூலம் உணரலாம். நாத்திகத்தை ஒரு நெறியாக கருதி, நாத்திக மதத்தை உலகாயதன் மதம் என்று சைவ சித்தாந்தம் குறிப்பிடுகின்றது.

பொழிப்புரை

நிலையில்லாத பொருட்களாக இருந்தாலும், நிலையானது போன்று பொய்யான தோற்றத்தை அளிக்கும் உலகப் பொருட்களின் வயப்படாது, புலியின் தோலை உரித்தவனாகிய சிவபெருமானுக்கு அடிமைத் தொழில் செய்து வாழும் அடியார்களுக்கு பணிவிடை செய்து, கரக்கோயிலில் உறையும் பெருமானையும் தொழுது வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. இறைவனை இகழ்வதே தங்கள் நோக்கமாகக் கொண்ட மனிதர்கள் உங்கள் இகழ்ந்தாலும், அந்த இகழ்ச்சியை நீங்கள் பொருட்படுத்தாமல், உங்களது பணியினை தவறாமல் செய்வீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.