திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 4

திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும்

Updated On :3 மார்ச் 2017, 12:48 pm

தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவமதானார் திருச்செம்பொன் பள்ளியாரே
 

விளக்கம்

தானவன் = தானம் வழங்குபவன், கொடை வள்ளல்.

பொழிப்புரை

திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் சிவபெருமான், அனைவர்க்கும் தந்தையாகவும் தாயாகவும், அவர்கள் வேண்டியது அளிக்கும் கொடை வள்ளலாகவும், ஞான வடிவினராகவும் விளங்குகின்றார். மேம்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இருக்கு முதலாய நான்கு வேதங்களை முறையாக சொல்லி, பெருமானே, நாங்கள் உன்னிடம் சரணடைகின்றோம் என்று சிவபெருமானை புகழ்ந்து வணங்க, அவர்களின் சிந்தையில் சிவமாக, திருச்செம்பொன்பள்ளியில் உறையும் பெருமான் விளங்குகின்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.