திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

53. கொள்ளும் காதன்மை -  பாடல் 9

படம் எடுத்தாடும் பாம்பினைப் போன்று

Updated On :22 மார்ச் 2017, 10:57 am

பணம் கொள் ஆடரவு அல்குல் பகீரதி
மணம் கொளச் சடை வைத்த மறையவன்
வணங்கு மா மயிலாடுதுறை அரன்
அணங்கு ஓர் பால் கொண்ட கோலம் அழகிதே
 

விளக்கம்

பணம் = படம். அல்குல் = மார்பகம். அணங்கு = பெண், இங்கே பார்வதி தேவி. வணங்கு என்ற சொல்லினை அணங்கு என்ற சொல்லுடன் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். பெருமானை மயில் வடிவத்தில் உமையம்மை வணங்கி பயன்பெற்ற செய்த இங்கே சொல்லப்படுகின்றது. பகீரதி = கங்கையின் மற்றொரு பெயர். பகீரதனால் மண்ணுலகத்திற்கு வரவழைக்கப்பட்டமையால் இந்த பெயர் ஏற்பட்டது.

பொழிப்புரை

படம் எடுத்தாடும் பாம்பினைப் போன்று புடைத்த மார்பகங்களை உடைய பகீரதியைத் தனது சடையில் அடக்கி, தன்னை திருமணம் புரியவைத்தவன் சிவபெருமான். மறையே வடிவாக உள்ள பெருமானை, உமையம்மை தவம் செய்து வழிபட, அவளது தவத்திற்கு இரங்கி, தேவிக்கு தனது உடலில் ஒரு பாகம் கொடுத்த அழகிய வடிவினன், மயிலாடுதுறையில் உள்ள பெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.