ஊன் தலை வலியனாகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப் பட்டு நின்று சார் கனலகத்து வீழ
வான் தலைத் தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும்
தோன்றலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
விளக்கம்
ஊன் தலை வலியன் = உடல் பலத்தால் வலியவன். சென்ற பாடலில், அன்னை அனைத்து உயிர்களுக்கும் தாயாக விளங்கும் தன்மையை குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில், பெருமான் அனைத்து உயிர்களுடன் கலந்து நின்று நிற்கும் தன்மையை உணர்த்துகின்றார்.
பொழிப்புரை
புலாலால் வடிவமைந்து உலகத்தில் காணப்படும் அனைத்து உயிர்களிலும் கலந்து நின்று, அந்த உயிர்களுக்கு வலிமை அளிப்பவனாக இருப்பவன் சிவபெருமான். இவ்வாறு பெருமான் அளித்த வலிமையால் வாழும் உயிர்கள், தாங்கள் முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைத் தொகுதியின் பயனாக பல துன்பங்களை அனுபவிக்க நேர்கின்றன. அத்தகைய தருணங்களில், அந்த துன்பங்களைத் தாங்க முடியாமல், தேவர்கள் உள்ளிட்ட பல உயிர்களும், வானவர்க்கும் இறைவனாக விளங்கும் மகாதேவா, என்று இறைஞ்சி வழிபட, அந்த உயிர்களுக்கு அருள் புரிவதற்காக தோன்றுபவன் சிவபெருமான். இத்தைகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, நான் துருத்தித் தலத்தில் கண்டேன். அடியார்களாகிய நீங்களும், பெருமானை துதித்து அவரை காணும் பேற்றினை பெறுவீர்களாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

