பாடல் 8:
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேனாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே
விளக்கம்:
அமர்=சண்டை; ஏய்ந்த=அமைந்த; காய்ந்தவன்=கோபித்தவன்; வால்மீகி இராமாயணம் உத்தர காண்டத்தில் இராவணனிடம் போர் புரிந்து தோற்றவர்களின் விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.
பொழிப்புரை:
புகழ் வாய்ந்த மன்னர்களும் வீரர்களும் தேவர்களும் அஞ்சும் வண்ணம் பாய்ந்து போர் புரியும் வல்லமை வாய்ந்த இலங்கை நகரின் மன்னவனான இராவணனுக்கு அமைந்துள்ள தோள்கள் அனைத்தும் ஒடிந்து விழுமாறு கோபம் கொண்டு, தனது கால் விரலால் மலையை அழுத்தி, அரக்கனை நசுக்கிய பெருமான் இருக்குமிடம் கருப்பறியலூர் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


