திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

102. முரசதிர்ந்து எழுதரு  - பாடல் 2

படமெடுக்கும் பாம்பினை

News image
Updated On :17 ஜூலை 2018, 10:00 am


பாடல் 2:

    மொய்குழலாளொடு முதுகுன்றம் மேவிய
    பை அரவம் அசைத்தீரே
    பை அரவம் அசைத்தீர் உமைப் பாடுவார்
    நைவிலர் நாடொறும் நலமே

விளக்கம்:

நைதல்=குறைதல்; மொய்த்த=நெருங்கிய, அடர்ந்த; பை அரவம்=படம் கொள்ளும் பாம்பு

பொழிப்புரை:

அடர்த்த கூந்தலை உடைய உமை அன்னையுடன் முதுகுன்றம் தலத்தில் பொருந்தி உறைகின்ற பெருமானே, படமெடுக்கும் பாம்பினை கச்சாக இடுப்பினில் இறுகக் கட்டி உமது விருப்பம் போன்று அசைப்பவரே, படமெடுக்கும் பாம்பினை அசைத்து ஆட்டும் உம்மை புகழ்ந்து பாடும் அடியார்கள் எந்த விதமான குறையும் இல்லாமல் வாழ்வார்கள்; அவர்கள் நாள்தோறும் நன்மையே அடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.