திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

96. கண் காட்டு நுதலானும் - பாடல் 8

தேவாரப் பாடல்களும்

News image
Updated On :1 ஜூலை 2018, 9:55 am

பாடல் 8:

    பண் மொய்த்த இன் மொழியாள் பயம்
       எய்த மலை எடுத்த
    உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்
        செய்தான் உறை கோயில்
    கண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக்
        கடல் முழங்க
    விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை
        முரலும் வெண்காடே

விளக்கம்:

மொழியாள்=சொல்லினை உடையவள்; கண்=மயில் தோகையில் உள்ள கண்கள்; மஞ்ஞை= மயில்; கருமை என்று குறிப்பிட்டாலும் அந்த சொல் நீல நிறத்தினை உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். உரம்=வலிமை; மொய்த்த=பொருந்திய; பண் மொய்த்த என்று குறிப்பிடுவதன் மூலம், இனிமையான பண்கள் தாமே சென்று தேவியின் சொற்களில் சென்று அமர்ந்தது போன்ற இனிமையான சொற்களை உடையவள் தேவி என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். உன்மத்தன்=பைத்தியக்காரன்; கயிலாய மலையினை பேர்த்து எடுக்க நினைப்பதே பெரிய குற்றம். அரக்கன் இராவணன் அறியாமையால் செய்தான் என்று எண்ணுவது என்பது தவறு என்று உணர்த்தும் முகமாக, இராமாயணம் தேர்ப்பாகன் அறிவுரை செய்ததை உணர்த்துகின்றது. பல தேவாரப் பாடல்களும், தேர்ப்பாகன் செய்த அறிவுரையை குறிப்பிடுகின்றன. எனவே தான், தேர்ப்பாகன் செய்த எச்சரிக்கையினையும் புறக்கணித்து, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் எண்ணத்துடன் அந்த மலையை நோக்கி ஓடியவனை பித்துக்குளி என்றும் பைத்தியக்காரன் என்று அழைப்பது மிகவும் பொருத்தம் தானே. சில பதிப்புகளில் உண்மத்தன் என்று காணப்படுகின்றது. எதுகை கருது உன்மத்தன் என்ற சொல் உண்மத்தன் என்று திரிந்ததாக கருதினார்கள் போலும்.

பொழிப்புரை:

பண்கள் தாமே சென்று தேவியின் வாயிலிருந்து வரும் சொற்களில் சென்று அமர்ந்தது என்று கருதும் வண்ணம் மிகவும் இனிமையான மொழியினைக் கொண்டுள்ள பார்வதி அன்னை, அச்சம் கொள்ளுமாறு கயிலை மலையினை அசைத்து பேர்த்து எடுக்க முயற்சி செய்த பைத்தியக்கார அரக்கன் இராவணனின் வலிமை குன்றுமாறு அவனை மலையின் கீழே அழுத்தி நெரித்தவனாகிய சிவபெருமான் உறையும் கோயில் திருவெண்காடு ஆகும். அழகிய கண்கள் சென்று பொருந்தியது போன்று காணப்படும் தோகைகளை உடைய நீலமயில்கள் நடமாட, அந்த நடனத்திற்கு ஏற்ப கடல் தனது அலைகளால் ஆரவாரம் செய்யும் காட்சியினையும் வானளாவ உயர்ந்த சோலைகளையும் உடையதும், அந்த சோலைகளில் உடலில் வரிகளை உடைய வண்டுகள் இசை முரல்வதும் ஆகிய தலம் வெண்காடு ஆகும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.