திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

97. மந்திர மறையவை - பாடல் 5

புண்ணியமே வடிவமாக

News image
Updated On :1 ஜூலை 2018, 10:20 am


பாடல் 5:

    பூதங்கள் பல உடைப் புனிதர் புண்ணியர்
    ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம்மிறை
    வேதம் கண் முதல்வர் வெண்காடு மேவிய
    பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே

விளக்கம்:

ஏதம்=குற்றம்; பரம்=மேலான பொருள்; பரமர்=அனைவர்க்கும் மேலான இறைவர்; வேதம் கண்=வேதங்களில்

பொழிப்புரை:

பூத கணங்கள் பல உடையவரும், தூய்மையானவரும், புண்ணியமே வடிவமாக இருப்பவரும் ஆகிய இறைவர் தம்மை வழிபடும் அடியார்களின் குற்றங்களை நீக்கி அவர்களது துன்பங்களையும் தீர்த்து அருளும் இயல்பினர் ஆவார், வேதங்களில் பல இடங்களிலும் முதல்வர் என்று கூறப்படும் சிவபெருமான், திருவெண்காடு தலத்தில் வீற்றிருக்கும் இறைவர், தனது திருப்பாதங்கள் அனைவராலும் தொழப்படும் வண்ணம் நிலையில் உள்ள, மேலான தெய்வமாக
விளங்குகின்றார் அல்லவா.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.