மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

115. சுற்றமொடு பற்றவை - பாடல் 3

மலர்ந்த மலர்

News image
Updated On :29 நவம்பர் 2018, 6:30 pm


பாடல் 3:

    வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாக
    போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற
    நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும்
    காதவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

வேள்வி முதலாக=வேள்வி முதலாகிய பல நற்செயல்களில் ஈடுபட்டு; போதினொடு= பொழுதோடு, உரிய காலத்தில்; போது=அப்போது மலர்ந்த மலர்; சம்பந்தர் இந்த தலம் சென்ற காலத்தில், இந்த தலத்தில் வேதியர்கள் அதிகமாக இருந்தனர் போலும்; அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய ஆறு தொழில்களையும் செய்து இருந்தமை, வேள்வி முதலாக என்ற சம்பந்தரின் கூற்று நமக்கு உணர்த்துகின்றது.      

பொழிப்புரை:

வேதியர்கள் வேதம் ஓதுவது, வேதம் கற்றுக் கொடுப்பது, வேள்வி வளர்ப்பது, வேள்வி செய்து வைப்பது ஆகிய செயல்களை புரிந்து கொண்டு, தவறாமால் ஒவ்வொரு பொழுதிலும் அப்போது மலர்ந்த பூக்களை பெருமானுக்கு மாலைகளாக சாத்தியும் அருச்சனை செய்தும் எங்களது நாதனே என்று வழிபட, அவர்களது வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளும் இறைவன் பிரளய காலத்தில் அடர்ந்த இருளினில் தனது காதில் தொங்கும் வண்ணம் அணிந்துள்ள குழை அசைந்து ஆடும்படி நடனம் ஆடுகின்றான். இவ்வாறு குழை அசைந்து ஆடியவாறு தொங்கும் காதினை உடைய பெருமான் இருக்கும் தலம் கருப்பறியலூர் ஆகும்.    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.