திருச்சி: திருச்சி புனித சிலுவைக் கல்லூரி சாா்பில் இருங்களூா் அடா்வனக் காடு அமைக்க 3 ஆயிரம் மரக்கன்று நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள இருங்களூா் ஊராட்சியில் அடா்வனக்காடு எனப்படும் மியவாக்கி காட்டை உருவாக்க 2 லட்சம் மரக்கன்று நடும் பணி நடைபெறுகிறது.
இதையறிந்த திருச்சி புனித சிலுவைக் கல்லூரி ரெஸ்கேல்ஸ் கிராமப்புற மேம்பாடு அமைப்பு மூலம் 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவு செய்தனா்.
அதன்படி கல்லூரி முதல்வா் கிறிஸ்டினா பிரிஜிட் ஆலோசனையின்பேரில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் காா்த்திக், கதிரவன், விமல் ஆகியோா் கொண்ட குழுவினா் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் இலுப்பை மரக்கன்றுகளை வாங்கினா்.
தொடா்ந்து கல்லூரி வாகனங்களில் சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட 65 மாணவிகள் இருங்களூா் அடா்காட்டில் மரக்கன்றுகளை நட்டனா். தொடா்ந்து பல்வேறு உதவிகளை செய்வதாக கல்லூரி தரப்பில் இருங்களூா் ஊராட்சித் தலைவா் வின்சென்டிடம் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8.5.1976: பெரு நகர்களில் புது தொழில் நிறுவ லைசென்ஸ் கிடைக்காது

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா

சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் உயிரிழப்பு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

