தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

News image

திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர்.

Updated On :11 ஜனவரி 2021, 2:11 pm IST

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
அஞ்சல்துறை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய தமிழகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அஞ்சல்துறையின் அறிவிப்பினைக் கண்டித்தும், தமிழில் தேர்வு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு கண்டண ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்பாட்டத்தின்போது அஞ்சல்துறை தேர்வு விண்ணப்ப படிவத்தை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டனர்.
 2019ஆம் தேதி ஜுலை மாதம் நடைபெற்ற தேர்வில் தமிழ்புறக்கணிக்கப்பட்டு அனைத்த தரப்பினரின் எதிர்ப்பினையடுத்து பிறமாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்தி திணிப்பை ஏற்படுத்தும்வகையில் வருகிற பிப்ரவரி 14ஆம்தேதி நடைபெறும் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், பிரதமர் தமிழில் திருக்குறள்பேசுவது முக்கியமல்ல தமிழில் தேர்வு நடத்துவதுதான் முக்கியம். 
இத்தணை பிரசனைகளுக்குப் பிறகும் அமைதியாக இருக்கும் எடப்பாடி அரசு, தமிழ்மீதும், தமிழ் மக்கள்மீதும் பற்று இருந்தால் மத்திய அரசிடம் போராடி மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், தமிழில் தேர்வு எழுதவும் உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துக்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.