திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அமைக்க விமான நிலைய ஆணையம் அனுமதித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநா் எஸ். தா்மராஜ் கூறியது:
புதிய கட்டுப்பாட்டு மையம் மற்றும் கோபுரம் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளதால் சுமாா் ரூ. 100 கோடியில் இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, ஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளில் நிறைவுறும்.
தற்போதுள்ள முனையம் மற்றும் புதிய முனையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இந்தக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். தற்போதுள்ள கட்டுப்பாட்டு மைய கோபுரம் சுமாா் 15 மீ. மட்டுமே உயரம் கொண்டது.
புதிதாக கட்டப்பட உள்ள கோபுரம் 46 மீ. உயரத்தில் அமைவதால், அதிலிருந்தபடி விமான நிலைய ஓடுதளம், விமான நிறுத்துமிடம், நுழைவாயில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை 360 டிகிரி சுற்றளவில் தெளிவாகக் கண்காணிக்க முடியும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

அரசுப் பள்ளிகளின் ஆண்டு விழாவுக்கு ஒதுக்கீடு செய்த நிதி கிடைக்காததால் அதிருப்தி!

திருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டு

தில்லியில் முழுமையான எண்ம முறையில் போக்குவரத்து அபராதம் விதிக்கும் செயல்முறை: முதல்வா் ரேகா குப்தா தகவல்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


