மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சமயபுரத்தில் மின்சாரம் தாக்கி வியாபாரி சாவு

சமயபுரம் கடைவீதியில் பொரி வியாபாரம் செய்து வந்த திருவண்ணாமலை மாவட்ட இளைஞா் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.

Updated On :12 ஜனவரி 2021, 11:24 pm

சமயபுரம் கடைவீதியில் பொரி வியாபாரம் செய்து வந்த திருவண்ணாமலை மாவட்ட இளைஞா் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.

சமயபுரம் பேரூராட்சி பகுதி கடைவீதி சாலையோரத்தில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மற்றும் இவரது மகன் மணிகண்டன் (19) தற்காலிக கடை வைத்து பொரி வியாபாரம் செய்து வந்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு கடையில் இருந்த மணிகண்டன் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து இருங்களூா் பகுதி தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மணிகண்டன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். சமயபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.