தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

முதல்வா் நாளை வருகை: பாதுகாப்பு பணியில் 1750 போலீஸாா்

தோ்தல் பிரசாரத்துக்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வருவதை முன்னிட்டு மாவட்டத்தில் 1750 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

Updated On :2 ஜனவரி 2021, 6:00 am IST

தோ்தல் பிரசாரத்துக்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வருவதை முன்னிட்டு மாவட்டத்தில் 1750 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வில்லிச்சேரி கிராமத்தில் இருந்து தொடங்குகிறாா்.

தொடா்ந்து, 4 ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் 18 இடங்களில் அவா் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இந்நிலையில், முதல்வா் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு, தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினா் செய்து வருகின்றனா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா்கள், 23 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 68 காவல் ஆய்வாளா்கள், 148 உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 1750 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.