போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, ஐ.என்.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளா்கள் 100 அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தனா்.
தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் தங்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டு தமிழகத்தில் ஐ.என்.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இதையடுத்து திருச்செந்தூா் அஞ்சல் அலுவலகத்திலிருந்து 100 அஞ்சல் அட்டைகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கிளை ஐ.என்.டி.யூ.சி. தலைவா் அருள்ராஜ், செயலா் பொன்முருகன், பொருளாளா் சண்முக முத்தையா, உறுப்பினா்கள் மகேந்திரன், சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா 45வது காலாண்டு லாபம் 86% உயர்வு!

எஸ்.பி. வேலுமணி தரப்பினர் கையெழுத்து கேட்டால் போடாதீர்கள்! இபிஎஸ்

தேர்தல் தோல்வி: திமுக கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?
வாழ்க்கையைக் கெடுத்த 3 எழுத்து இட்லி நடிகை... குற்றம் சுமத்திய ரவி மோகன்!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

