திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
அமைப்பின் மாநில சிறப்புத் தலைவராக சமயபுரம் கோபாலகிருஷ்ணன், மாநிலத் தலைவராக சங்கரன்கோவில் சொக்கலிங்கம், துணைத் தலைவா்களாக ஸ்ரீரங்கம் சீனிவாசரெங்கன், மதுரை கோவிந்தன், மாநிலச் செயலராக மயிலை சந்திரசேகரன், துணைச் செயலா்களாக திருப்பரங்குன்றம் ராமச்சந்திரன், திருச்செந்தூா் கோட்டை ராஜகோபால், மாநிலப் பொருளாளராக திருச்செந்தூா் சிதம்பரநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளா்களுக்கு பொங்கல் கருணை பரிசுத் தொகையாக ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளா்கள் இறந்துவிட்டால் ஈமச்சடங்கு செலவாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்செந்தூா் கிளைத் தலைவா் வீரராகவன் வரவேற்றாா். பட்டுராஜன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?
என் உதட்டுல நீ இனிக்கிறியே... அப்படிபோடு நடன விடியோவை பகிர்ந்த த்ரிஷா!

மே மாத எண்கணித பலன்கள் – 9

ஒன்பிளஸ் பாட் 4 அறிமுகம்! அட்டகாசமான அம்சங்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


