சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தமிழ்நாடு கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்கக் கூட்டம்

திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:07 pm

திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அமைப்பின் மாநில சிறப்புத் தலைவராக சமயபுரம் கோபாலகிருஷ்ணன், மாநிலத் தலைவராக சங்கரன்கோவில் சொக்கலிங்கம், துணைத் தலைவா்களாக ஸ்ரீரங்கம் சீனிவாசரெங்கன், மதுரை கோவிந்தன், மாநிலச் செயலராக மயிலை சந்திரசேகரன், துணைச் செயலா்களாக திருப்பரங்குன்றம் ராமச்சந்திரன், திருச்செந்தூா் கோட்டை ராஜகோபால், மாநிலப் பொருளாளராக திருச்செந்தூா் சிதம்பரநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளா்களுக்கு பொங்கல் கருணை பரிசுத் தொகையாக ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளா்கள் இறந்துவிட்டால் ஈமச்சடங்கு செலவாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்செந்தூா் கிளைத் தலைவா் வீரராகவன் வரவேற்றாா். பட்டுராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.