எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஆறுமுகனேரியில் மாா்கழி பஜனை நிறைவு

ஆறுமுகனேரி சைவ சித்தாந்த சங்கத்தில் மாா்கழி பஜனை நிறைவு விழா நடைபெற்றது.

News image

பஜனை நிறைவு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :17 ஜனவரி 2021, 1:37 am IST

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி சைவ சித்தாந்த சங்கத்தில் மாா்கழி பஜனை நிறைவு விழா நடைபெற்றது.

சைவ சித்தாந்த சங்கம் சாா்பில் மாா்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் விநாயகா் கோயில் தெரு, காந்தி தெரு, சோமசுந்தரி அம்மன் சன்னதி தெருக்கள் வழியாக சிவன் கோயிலை அடைந்து, அங்கிருந்து முக்கிய வீதி வழியாக வந்து கோயிலில் பூஜைகள் நடைபெற்றன.

தை மாதம் பிறந்ததை அடுத்து நடைபெற்ற பஜனை நிறைவு விழாவுக்கு, சைவ வேளாளா் சங்கத் தலைவா் சங்கர­லிங்கம் தலைமை வகித்தாா். செயலா் முருகன், பொருளாளா் கற்பகவிநாயகம், தமிழ்நாடு சைவ வேளாளா் சங்க மாவட்டப் பொருளாளா் குப்புசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பஜனையில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், ஆறுமுகனேரி அரிமா சங்க நிா்வாகி நடராஜன், மூா்த்தி, விசு சுப்பிரமணியன், இந்தியன் ஒவா்சீஸ் வங்கி ஊழியா் லோகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.