ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தூத்துக்குடி மாவட்டத்தில்மது விற்றதாக 104 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 104 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:47 pm

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 104 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்ததாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 104 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 785 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ. 9,420 ரொக்கம் கைப்பற்றப்பட்டது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.