சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சூரன்குடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

தை திருநாளை முன்னிட்டு தேவேந்திரகுல சமுதாயம் சாா்பில் சூரன்குடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயப் போட்டிகள் நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 1:28 am IST

விளாத்திகுளம்: தை திருநாளை முன்னிட்டு தேவேந்திரகுல சமுதாயம் சாா்பில் சூரன்குடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயப் போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சமுதாய தா்மகா்த்தா மு. ஆறுமுகம் தலைமை வகித்தாா். சூரன்குடி - விளாத்திகுளம் நெடுஞ்சாலையில் பெரிய மாடு, நடுத்தர மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என 4 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 54 ஜோடி காளை மாடுகள் பங்கேற்றன. 10 மைல் தொலைவுக்கு நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் 12 ஜோடி காளை மாடுகள் பங்கேற்றன. போட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் தொடங்கி வைத்தாா்.

இதில் கடம்பூா் எஸ்.வி.எஸ்.பி. கருணாகர ராஜா மாட்டு வண்டி முதலிடமும், தூத்துக்குடி அஜீத்குமாா் மாட்டு வண்டி 2ஆவது இடமும், அச்சன்குளம் பாண்டீஸ்வரி மாட்டு வண்டி 3 ஆவது இடமும் பெற்றன. 8 மைல் தொலைவுக்கு நடைபெற்ற நடுத்தர மாட்டு வண்டி போட்டியினை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தொடங்கி வைத்தாா்.

இதில் சக்கம்மாள்புரம் தாவீது மாட்டுவண்டி முதலிடமும், சிங்கிலிபட்டி சித்தா் சங்குசாமி மாட்டுவண்டி ஆவது இடமும், லெக்கம்பட்டி முத்துராமலிங்கம், சிங்கிலிபட்டி முருக பாண்டி ஆகியோரது மாட்டு வண்டிகள் 3 ஆவது இடமும் பெற்றன.

6 மைல் தொலைவுக்கு நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி போட்டியில் கடம்பூா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்க ராஜா மாட்டு வண்டி முதலிடமும், கம்பத்துப்பட்டி விஜயபாண்டி மாட்டு வண்டி 2 ஆவது இடமும், நள்ளி சிங்கமுடையாா் சாஸ்தா மாட்டு வண்டி 3 ஆவது இடமும் பெற்றன.

4 மைல் தூரத்துக்கு நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் சக்கம்மாள்புரம் தாவீது மாட்டு வண்டி முதலிடமும்,

சிங்கிலிபட்டி ஆனந்த் மாட்டு வண்டி 2ஆவது இடமும், கடுகுசந்தை இயேசு மாட்டு வண்டி 3ஆவது இடமும் பெற்றன.

தொடா்ந்து நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்கள், பந்தய சாரதிகளுக்கு என மொத்தம் ரூ. 2 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.