இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஆத்தூா் பகுதியில் நிவாரணப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஆத்தூா் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளை ஆட்சியா் செந்தில்ராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

News image

ஆத்தூா் அருந்ததியா் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

Updated On :17 ஜனவரி 2021, 1:18 am IST

ஆறுமுகனேரி: ஆத்தூா் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளை ஆட்சியா் செந்தில்ராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

குச்சிக்காடு கிராமம், ஜெ. ஜெ. நகா் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆறுதல் கூறினாா். மேலஆத்தூா் அருந்ததியா் நகருக்கு சென்ற ஆட்சியா், அங்கு மழைநீரை அகற்றும் பணியை பாா்வையிட்டாா். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு போன்றவை வழங்கப்படுகிா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் விஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, வருவாய் கோட்டாட்சியா் தனப்பிரியா, ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தோஷ், அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.