மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காதல் சின்னமாகத் திகழும் ராஜா - ராணி பாறை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கிராமத்தில், தாஜ்மஹால் போல, மலைக்குன்று மீதுள்ள ராஜா - ராணி பாறை காதலின் சின்னமாக விளங்கி வருகிறது.

News image
வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடியில் உள்ள ராஜா-ராணி மலைக்குன்றின் தோற்றம்.
Updated On :14 பிப்ரவரி 2022, 9:36 am

பெரியார் மன்னன்


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கிராமத்தில், தாஜ்மஹால் போல, மலைக்குன்று மீதுள்ள ராஜா - ராணி பாறை காதலின் சின்னமாக விளங்கி வருகிறது.

வாழப்பாடிக்கு அடுத்து 5 கி.மீ. துாரத்தில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, சேசன்சாவடி கிராமம் அமைந்துள்ளது. காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட இந்தக் கிராமத்தில் தென்கிழக்கு பகுதியில் காணப்படும் சிறிய மலைக்குன்றின் உச்சியில், இரு பெரிய பாறைகள் அருகருகே நீள்வாட்டத்தில் காணப்படுகின்றன.

சேசன்சாவடி கிராமத்தில் இருந்து பார்ப்பதற்கு, அந்த மலைக் குன்றின் மேல் ஒரு ஆணும் பெண்ணும் கம்பீரமாக நிற்பதைப் போல தோற்றமளிக்கிறது. இப்பகுதியை ஆட்சி செய்து வந்த இணைபிரியாத காதலர்களான குறுநில மன்னரும், அரசியும் நீண்ட காலம் வாழ்ந்தபிறகு அந்த மலைக்குன்றில் மறைந்ததாக அப்பகுதி நம்பிக்கை கொண்டுள்ளதால், இப்பாறைக்கு ராஜா-ராணி பாறையென பெயரிட்டு இன்றளவும் அழைத்து வருகின்றனர்.

மலைக்குன்றில் கீழ் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமான காளியம்மன், முனியப்பன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளதால், கோயிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும், இந்த மலைக்குன்றின் மீது ஏறி, தாஜ்மஹால் போல காதல் சின்னமாக விளங்கும் ராஜா-ராணி பாறையை அருகில் சென்று பார்த்துச் செல்கின்றனர்.

இப்பகுதி சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களுக்கு இந்த ராஜா-ராணி பாறை பொழுதுபோக்கு இடமாகத் திகழ்ந்து வருகிறது.

இந்த ராஜா-ராணி மலைக்குன்றை சுற்றியும் அரணாக இருந்த கருங்கல் பாறைகளை உடைத்து எடுக்கப்படுவதால், காதலின்  சின்னமாகத் திகழும் ராஜா-ராணி மலைக்குன்று சிதைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த மலைக்குன்றையும், ராஜா-ராணி பாறையும் சிதையாமல் பாதுகாக்கவும், சுற்றிலும் மரம், செடி கொடிகளை வளர்த்து பூங்காவாக மாற்றிடவும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி இளைஞர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.