திருவான்மியூர் தலம் குறித்த சம்பந்தப் பெருமானின் தேவாரப் பாடல் இது. இரண்டாம் திருமுறையில் வரும் இந்தப் பதிகத்தில் வினா உரையாக கேள்வி கேட்பதாய் அமைந்து, சிவ பெருமானின் தன்மையை வெளிப்படுத்துகிறார் சம்பந்தர்.
சிவபெருமானின் திருவிளையாடல்கள் பல. பெருமான் உலகைக் காக்க, தான் நஞ்சை உண்டு, தேவர்க்கு அமுதத்தை அளித்தார். அந்தத் தன்மையை உலகோர்க்கு எடுத்துரைக்கும் சம்பந்தர், அதையே வினாவாக இறைவனிடம் கேட்பதுபோல், அவர் பெருமையைச் சொல்கிறார் இவ்வாறு.
மஞ்சு லாவிய மாடம திற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த்
துஞ்சு வஞ்சிரு ளாட லுகக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.
-"மேகங்கள் உலாவும் மாடங்களையும் மதில்களையும் அழகிய மாளிகைகளையும் உடையதாக, இனிய சொற்களைப் பேசுவோர் வாழ்வதாக விளங்குகிறது திருவான்மியூர். இவ்வூரில் எல்லோரும் உறங்கும் காரிருள் மண்டிக் கிடக்கும் இரவுப் பொழுதில், ஆடலை விரும்பி மேற்கொள்ளும் வன்மையை உடையவராய் இலங்கும் இறைவரே! கரிய விஷத்தை நீர் உண்டு தேவர்களுக்கு இனிய அருள் வழங்கியது ஏனோ சொல்வீர்...'' என்று வினவுகிறார் சம்பந்தர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

