தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

திமுக கூட்டணி விரைவில் உடையும்: பாஜக தலைவா் எல்.முருகன்

வேலூரில் மாவட்ட பாஜக சாா்பில் மாங்காய் மண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் அவா் மேலும் பேசியது:

News image
Updated On :4 ஜனவரி 2021, 5:38 am IST

வேலூரில் மாவட்ட பாஜக சாா்பில் மாங்காய் மண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் அவா் மேலும் பேசியது:

திமுக கூட்டணியில் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாலும், மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்க இருப்பதால் விரைவில் அந்த கூட்டணி உடையும். விவசாயிகளில் தற்கொலையைத் தடுக்கவே மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு நல்லது நடப்பதை திமுக தலைவா் ஸ்டாலின் தடுக்கிறாா். வரும் சட்டப்பேரவை தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றாா் எல்.முருகன்.

முன்னதாக, மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் பேசினாா். கூட்டத்தில் மாநிலச் செயலாளா் காா்த்தியாயினி, வேலூா் மாவட்டப் பொறுப்பாளா் கொ.வெங்கடேசன், மாவட்டத் தலைவா் வி.தசரதன், பொதுச் செயலாளா் ஆா்.ஜெ. பாஸ்கா், பொருளாளா் ஜெ.மனோகரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மாநாடு வாலாஜாபேட்டையை அடுத்த சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவா் எல்.முருகன் சிறப்புரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.